Main Menu

கால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சினிமாவில் நடிக்கவுள்ளதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்ச்சுகல் வீரரான ரொனால்டோ, கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிவருகிறார். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது  எதிர்காலம் திட்டம் குறித்து பேசிய அவர், களத்தில் தனது உடல் எப்போது ஒத்துழைக்கவில்லையோ அப்போது கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்தார்.

ஓய்வுக்கு  பின்னர் சினிமாவில் நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்த ரொனால்டோ, ஹாலிவுட் படங்களில் நடிக்க திட்டம் உள்ளதாகவும் கூறினார். ஓய்வுக்கு பிறகு தனது படிப்பை தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பகிரவும்...