Main Menu

நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து 15 பேரை கத்தியால் குத்திய நபர் கைது!

நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராக்லேண்ட் கவுண்டியில் உள்ள மான்சி என்ற கிராமத்தில் ஹசிடிக் ரப்பி என்பவர் வீட்டில் நேற்றிரவு வாராந்திர பிராத்தனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு முகமூடியுடன் நுழைந்த நபர், பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களை கத்தியால் சராமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் 15 பேர் படுகாயமடைந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தப்பியோடுவதற்கு முன்பே தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.

பகிரவும்...