Main Menu

மகாத்மா என்ற மாமனிதன் !!! – கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

மகாத்மா என்ற மாமனிதன்!

அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்து
அகிம்சை எனும் ஆயுதத்தை கையிலேந்தி
அறிவுச் சுடராய் அரசியல் மேதையாய்
சுதந்திரத்தை சுவீகரித்த மகானாய்
சுதந்திர உணர்வைத் தட்டியெழுப்பிய வீரராய்
அக்டோபர் இரண்டில் அவதரித்தாரே !

எளிமையின் வடிவமாய் ஏழைகளைக் காத்து
தொண்டின் இமயமாய் தோழமை பேணி
தியாகச் சின்னமாய் தீண்டாமையை ஒழித்து
சத்தியசோதனை தந்த நித்திய மகானாய்
சத்தியாக்கிரகம் செய்த உத்தம சீலராய்
உலகம் போற்ற வாழ்ந்தாரே !

அண்ணலின் அமைதியும்,கனிவுமொழியும்
புன்னகை சிந்தும் பொக்கை வாயும்
தியாக சிந்தனையும்,தீவிர நாட்டமும்
மாந்தருள் மாணிக்கமாய், மகானாய்
மண்ணுலகில் ஆக்கியதே தேசபிதாவாய் !

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நினைவுக்கவி (அக்டோபர் 02.2018)
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...