TRTவானொலி நேயரின் சமூகப் பணியூடாக மதிய போசனம்
புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழும் திருமதி இராஜரட்ணம் அவர்கள் தனது பிறந்தநாளை ஒட்டி வவுனியா வடக்கு நெடுங்கேணி சிரேஷ்ட பிரஜைகள் சங்க (முதியோர் சங்கம்) உறுப்பினர்களுக்கு மதிய போசனம் அளித்துள்ளார்.
ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் இன்று (11/03/2014) நெடுங்கேணியில் இம் மதிய போசனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மதிய போசனத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த நெடுங்கேணி சிரேஷ்ட பிரஜைகள் சங்கத் தலைவர்,
திருமதி இராஜரட்ணம் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர் நீண்ட ஆயுளுடன் சிறப்புடன் வாழ இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் இம் மதிய போசனத்திற்கான ஏற்பாட்டினை மேற்கொண்ட ரி.ஆர்.ரி வானொலி நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.