Main Menu

நெடுங்கேணியில் மாணவா்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

TRT சமூகப்பணி ஊடாக லண்டனை சேர்ந்த Dr.ரவி ரஞ்னி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வ/நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திரு பவேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் நெடுங்கேணி மற்றும் ஒலுமடு பாடசாலையை சேர்ந்த 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் மாகாணாசபை உறுப்பினர் ம.தியாகரசா மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ்செல்வன் இராஜசுலோசனா மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் திரு தேவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒவ்வொருவருடமும் TRT வானொலியின் சமூகப்பணியின் ஊடாக அதற்கு பொறுப்பான திரு திரவியநாதன் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழுகின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வருவது குறிப்பிடதக்கது.
அதிபா் மற்றும் மாணவா்கள் நன்றியை தொிவித்துக் கொண்டனா்.

பகிரவும்...