Main Menu

மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!

மன்னார் மாவட்டத்தில் விசேடதேவைக்குட்பட்ட முன்னாள்போராளிகள், காணாமல்ஆக்கப்பட்டோர், புனர்வாழ்வளிக்கப்பட்டோர், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பத்து பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவணிகள் இன்று 30.12.2018  மன்னாரில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் மன்னார் நகரசபை மற்றும் நானாட்டான் பிரதேசசபை உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர் இவ் நிகழ்விற்கான நிதி அனுசரணையை  TRT தமிழ் வானொலியின் சமூகப்பணி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...