Main Menu

தோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல்

TRT தமிழ் ஒலியின் சமூகப்பணியூடாக எமது வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி முகாமையாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அமரர்.தோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அல்லலுறும் தாயக உறவுகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

அதன்படி, தொடர் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரின் போராட்டத்துக்கான இருப்பிட பந்தல் வாடகைப்பண உதவியாக 20 000 ரூபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், வாரிக்குட்டியூர் பாவற்குளம் கணேஷ்வரா மகா வித்தியாலய மாணவர்களுக்கு மதிய உணவு அன்னதானமும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி உதவியானது கடந்த திங்கட்கிழமை 5ம் திகதி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...