Author: trttamilolli
கொரோனா தொற்று – அதிக அவதானம் நிறைந்த 3 மாவட்டங்கள் அறிவிப்பு!
COVID-19 வைரஸ் பரவுவதற்கான அதிக அவதானம் நிறைந்த மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறித்த மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டமேலும் படிக்க...
கொரோனா – பிரான்சில் சாவடைந்தோர் 1100: தொற்றுக்கு உள்ளானவர்கள் 2,448
இன்று பிரான்சில் கொரோனா வைரசினால் சாவடைந்தோர் தொகையானது 240 பேரினால் அதிகரித்து, 1100 பேராக அதிகரித்துள்ளது. இந்தத் தகவலைத் சுகாதாரத்துறை தலைமை அதிகாரி ஜெரோம் சாலமொன் தெரிவித்துள்ளார். தொற்றுநோய்க்கு உள்ளானவர்கள் 2,448 பேரினால் அதிகரித்து 22,304 ஆக அதிகரித்துள்ளது. அவசரசிகிச்சைப் பிரிவில்மேலும் படிக்க...
உள்ளிருப்புக் காலம் ஆறு வாரங்கள் நீட்டிக்க கோரிக்கை
உள்ளிருப்புக் காலமானது (CONFINEMENT) ஆகக்குறைந்தது ஆறுவாரங்களிற்குத் தொடரவேண்டும் எனப் பிரான்சின் Covid-19 விஞ்ஞான ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக, ஜனதிபதியும் பிரதமரும், உள்ளிருப்புக் காலம் தொடர்பாக இவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. உள்ளிருப்புக்காலம் ஆரம்பித்த 17 மார்ச் இலிருந்துமேலும் படிக்க...
கொரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம்: சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் வழக்கு
கொரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். டெக்சாஸைச் சேர்ந்த வழக்கறிஞர் லாரி க்ளேமேன். இவர், அமெரிக்க மாவட்ட நீதிமன்றமான மேற்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், ”கொரோனா வைரஸ் சீனாவால்மேலும் படிக்க...
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கொரோனா வைரஸ் இல்லை
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முதற்கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா, உலக நாடுகள் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியில் இதுவரை கொரோனாவால் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பின்மேலும் படிக்க...
மாஸ்கோவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் 1 லட்சம் கேமராக்கள்
மாஸ்கோவில் சுமார் 1 லட்சம் கேமராக்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ்,மேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனா பலி 400-ஐ கடந்தது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,000 நெருங்கியது
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் இந்த கொடிய வைரசிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் வடக்கில் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில் அலை மோதிய மக்கள்!
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுக்கடுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வடக்கு மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்து. இந்நிலையில்மேலும் படிக்க...
சுகாதார அவசரகால நிலை பிரகடனம் – அரச வர்த்தமானி வெளியீடு
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சில வாரங்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார அவசரகால நிலைப் பிரகடனத்திற்கான சட்டம் இன்று அரச வர்த்தமானியில் (Journal officiel) வெளியாகி உள்ளது. சில வாரங்களிற்கு வெளியே செல்வதும் வருவதும் கடுமையான சோதனைகளிற்கும் கட்டப்பாடுகளிற்கும் உட்பட்டு இருக்கும். Covid-19 இன்மேலும் படிக்க...
144 தடையுத்தரவு – பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்
144 தடையுத்தரவு இன்று மாலை 6 மணிக்கு மேல் அமுலாவதால், பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சுயக் கட்டுப்பாடு அவசியம்,144 தடையுத்தரவு அமுல்படுத்தப்படும் நிலையில் பொதுமக்கள்மேலும் படிக்க...
இத்தாலியின் இறப்புகள் குறைந்தன – நம்பிக்கையின் பிரகாசத்தை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவிப்பு
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இது நம்பிக்கையின் பிரகாசத்தை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று 602 ஆக அதிகரித்திருந்ததுடன் இது கடந்த நான்கு நாட்களுக்கு மிகச்சிறிய அதிகரிப்பு என்றும் அதிகாரிகள்மேலும் படிக்க...
அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு அரசாங்கம் ஆலோசனை!
மக்களுக்குத்தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இன்று(செவ்வாய்கிழமை) காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும் அதிகளவிலானவர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய ஒன்றுகூடியிருந்தனர். இது கொரோனாமேலும் படிக்க...
வடக்கில் விசேட ஏற்பாடுகள்- வடக்கு ஆளுநர் அறிவிப்பு!
வடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணம் முற்றாக முடக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத்மேலும் படிக்க...
ஹண்டா வைரஸ்.. கொரோனாவிற்கு இடையே சீனாவில் புது வகை வைரஸால் இளைஞர் பலி..
சீனாவில் ஹண்டா வைரஸ் எனப்படும் புது வகை வைரஸ் ஒன்றால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அச்சத்தில் இருக்கும் போது அவர்களின் மனது மிகவும் மென்மையானதாக இருக்கும். அவர்களால் சில பொய்யான விஷயங்களை கூடமேலும் படிக்க...
பிரான்சில் மூடப்படும் வீதியோர அங்காடிகள்
பிரான்சில் சந்தைகள் அனைத்தையும் மூடும் உத்தரவைப் பிரதமர் எதுவார் பிலிப் வழங்கி உள்ளார். உடனடியாகப் பரிசிலுள்ள திறந்த சந்தைகள் மூடப்படுகின்றன. பரிசிலுள்ள சந்தைகளை உடனடியாக மூடும் உத்தரவினைப் பரிசின் நகரபிதா அன் இதால்கோ அறிவித்துள்ளார். சந்தைகளில், ஒரு மீற்றர் பாதுகாப்பு எல்லையா னதுமேலும் படிக்க...
Pôle emploi – இனிமேல் தொலைபேசித் தொடர்புகள் மட்டும்!
உள்ளிருப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வேலை மேடுவோரிற்கான அவசர தேவைகளிற்காகவும், மிகவும் முக்கிய சந்திப்புக்களிற்காகவும், Pôle emploi திறந்தே இருந்து வந்துள்ளது. ஆனால் Pôle emploi அதிகாரிகளின் தொழிற்சங்கம் இதனை எதிர்த்து, வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அனைத்துக் கிளைகளையும் மூடவேண்டும் எனப் பணித்திருந்தது. இதனால்மேலும் படிக்க...
கொரோனா – ஈரானின் இறப்பு எண்ணிக்கை 1,812 ஆக உயர்வு
ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,812 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைமேலும் படிக்க...
ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பௌண்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர், ஜப்பானின் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பமேலும் படிக்க...
கொரோனா – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்!
கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக கடந்த ஒருவாரத்திற்குள் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர்மேலும் படிக்க...
தமிழகத்தில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று!
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில நேற்று 9 ஆக இருந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்கள் அதிகம் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 456
- 457
- 458
- 459
- 460
- 461
- 462
- …
- 827
- மேலும் படிக்க