Main Menu

கொரோனா – ஈரானின் இறப்பு எண்ணிக்கை 1,812 ஆக உயர்வு

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,812 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,812 ஆக அதிகரித்துள்ளது என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,400க்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுமார் 23,043 பேர்  இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸினால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறமையினால் வெள்ளிக்கிழமை வழிபாடுகள் இரத்து செய்யப்பட்டன.

மேலும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்தும் வைரஸ் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...