Day: October 31, 2020
இத்தாலியில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டது!
இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 31ஆயிரத்து 084பேர்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் முடக்க நிலையை நடைமுறைப் படுத்துவது குறித்து பிரதமர் பரீசிலணை!
இங்கிலாந்து முழுவதும் ஒரு மாத கால முடக்கநிலையை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் பரிசீலித்து வருகிறார். பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை, அவர் திங்கட்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்தின் முதல் கொவிட்-19 தொற்றலையைமேலும் படிக்க...
மஹா சங்கத்தினரிடம் பிரதமர் விடுத்த வேண்டுகோள்
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசீ வேண்டி, நாட்டின் அனைத்து விகாரைகளிலும் ரதன சூத்திரம் பாராயணம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மஹாசங்கத்தினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொவிட்-19 தொற்று காரணமாக இதுவரை இலங்கை மாத்திரமன்றி முழு உலகமும்மேலும் படிக்க...
நீஸ் பயங்கரவாத தாக்குதல்: மூன்றாவது சந்தேக நபர் கைது
நீஸ் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு நகரத்தின் நோட்ரே டேம் தேவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து 21 வயதுடைய மற்றும்மேலும் படிக்க...
நாட்டில் மேலும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 137 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 38 பேர் தனிமைப்படுத்தப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய99 பேரும் மினுவங்கொட, பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடித்மேலும் படிக்க...
ஜேம்ஸ் போண்ட் புகழ் சேர் சீன் கோனரி காலமானார்!
ஜேம்ஸ் போண்ட் கதாபாத்திரத்தில் பிரபலமடைந்த ஸ்கொற்லாந்து நடிகர் சேர் சீன் கோனரி (Sir Sean Connery) தனது 90ஆவது வயதில் காலமாகியுள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சேர் சீன், பஹாமாஸில் (Bahamas) இருந்தபோது, சில மணிநேரம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதைத்மேலும் படிக்க...
கொரோனா தொற்றாளர்களுடன் பேருந்தில் யாழிற்கு பயணித்த ஆறுபேர் தலைமறைவு!
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் தொலைபேசியை நிறுத்திவைத்து தலைமறைவாகியுள்ளதாக வடக்கு மாகாணமேலும் படிக்க...
கருணாநிதி சிலை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தனக்கு சொந்தமான நிலத்தில், தனது கட்சியின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை அமைக்க அனுமதிக்கக் கோரி, தி.மு.க.பிரமுகர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க.பொதுக்குழு உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.நாராயணன் இவ்விடயம் தொடர்பாக வழக்குமேலும் படிக்க...
தற்போது பரவும் கொரோனா வைரஸ் முன்னரை விட வீரியமானது
நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸ், முன்னர் பரவியதை விட வித்தியாசமானதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் வீரியமானது என்பதால், தொற்று பரவலின் வேகம் அதிகரிக்குமெனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, பேலியகொடை மீன்மேலும் படிக்க...
பிரான்ஸ் தேவாலய பயங்கரவாதத் தாக்குதல்: மேலும் ஒருவர் கைது!
பிரான்ஸ்- நீஸ் நகர நோட்டர் டாம் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனனர். 47 வயதான குறித்த நபர், தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இஸாவியுடன் தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு தொடர்பிலிருந்ததாக விசாரணை அதிகாரிகள்மேலும் படிக்க...
நியூஸிலாந்தில் கருணைக் கொலையை சட்டபூர்வமாக்க பெருமளவான மக்கள் வாக்களிப்பு!
குணப்படுத்தவோ அல்லது போதுமான சிகிச்சையளிக்கவோ முடியாதவர்களுக்கு கருணைக் கொலையை சட்டபூர்வமானதாக்க பெருமளவான நியூஸிலாந்து மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். கருணைக்கொலை தொடர்பாக பல ஆண்டுகள் இடம்பெற்ற உணர்ச்சிபூர்வமான விவாதங்களையடுத்து, அதனைச் சட்டபூர்வமாக்குவது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இம்மாத நடுப்பகுதியில் நடத்தப்பட்டமேலும் படிக்க...
திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா?
பிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ் வீட்டிற்குள் அவருக்கும், கவினுக்கும் இடையில்மேலும் படிக்க...
நடிகை காஜல் அகர்வால் திருமண பந்தத்தில் இணைந்தார்
மும்பையில் நடைபெற்ற நடிகை காஜல் அகர்வாலின் திருமண ஒளிப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) தொழிலதிபர் கெளதம் கிச்லுவும் நடிகை காஜல் அகர்வாலும் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளனர். மும்பையிலுள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கியமேலும் படிக்க...
சுத்தமான தண்ணீருக்காக குரல் கொடுக்கும் பழங்குடிக் குழந்தைகள்!
நான்கு பழங்குடிக் குழந்தைகள் தங்கள் சமூகத்தில் சுத்தமான தண்ணீருக்காக அழைக்கும் காணொளியுடன் பிரதமருக்கு ஜக்மீத் சிங் டுவீட் செய்துள்ளார், காணொளியில் உள்ள குழந்தைகள், எப்போது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம், எப்போது அவர்களின் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கேட்கிறார்கள்.மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடன் வாக்களித்தார்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோர், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே அவர்கள் தங்களது வாக்குகளை வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவுசெய்தனர். இதன்போதுமேலும் படிக்க...
உலகநாடுகள் அதிர்ச்சி: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒரு இலட்சத்து ஆயிரத்து 461பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 988பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில்மேலும் படிக்க...
துருக்கி- கிரேக்கத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்வு!
துருக்கி மற்றும் கிரேக்கத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. மேலும், 800இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களைத் தேடும் முயற்சியில், மீட்புப் படையினர் சனிக்கிழமை அதிகாலையில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியின் மேற்கில் கடலோரப் பகுதிகளில்மேலும் படிக்க...
தமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து வைத்துக் கொள்வோம்- முதலமைச்சர்
தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ருவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது- பிரதமர்
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் கெவாடியா நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மேலும்மேலும் படிக்க...
பல்கலைக் கழகங்களுக்கு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதி
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்மேலும் படிக்க...