Main Menu

இத்தாலியில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டது!

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 31ஆயிரத்து 084பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 199பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில் இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்து 47ஆயிரத்து 674பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மொத்தமாக 38ஆயிரத்து 321பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை இரண்டு இலட்சத்து 83ஆயிரத்து 567பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 746பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இரண்டு இலட்சத்து 83ஆயிரத்து 567பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்

பகிரவும்...