Main Menu

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடன் வாக்களித்தார்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோர், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே அவர்கள் தங்களது வாக்குகளை வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவுசெய்தனர்.

இதன்போது கருத்துதெரிவித்த அவர், ‘பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை பொலிஸார் சுட்டுக்கொலை செய்த நிலையில் வெடித்த வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தான் ஜனாதிபதியானால் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும்’ என கூறினார்.

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலையொட்டி கிட்டத்தட்ட 5 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர்.

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...