Main Menu

சுத்தமான தண்ணீருக்காக குரல் கொடுக்கும் பழங்குடிக் குழந்தைகள்!

நான்கு பழங்குடிக் குழந்தைகள் தங்கள் சமூகத்தில் சுத்தமான தண்ணீருக்காக அழைக்கும் காணொளியுடன் பிரதமருக்கு ஜக்மீத் சிங் டுவீட் செய்துள்ளார்,

காணொளியில் உள்ள குழந்தைகள், எப்போது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம், எப்போது அவர்களின் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கேட்கிறார்கள்.

ஜக்மீத் சிங் தன்னைப் பற்றிய ஒரு காணொளியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு நாளுக்குப் பிறகு, டுவீட் வந்துள்ளது.

நெஸ்காண்டகா தேசம் மற்றும் பல பழங்குடிச் சமூகங்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நீர் நெருக்கடியை அதில் விளக்கினார்.
நெஸ்காண்டகா தேசமும் பல பழங்குடிச் சமூகங்களும் நீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று அவர் பதிவில் தலைப்பிட்டார். சுத்தமான நீர் இல்லாமல் 25 ஆண்டுகள் அது ஒரு நூற்றாண்டின் கால் பகுதி என்றார்.

ஒரு மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நீர் நெருக்கடியை ஒப்புக் கொண்டார். இன்னும் நிறைய வேலைகள் உள்ளன என்று ஒப்புக் கொண்டார். இந்தப் பிரச்சினை ஒரு அரசாங்கமாக எங்களுக்கு ஒரு மோசமான விஷயம் என்று அவர் மேலும் கூறினார். கனேடியர்கள் மிக விரைவாக செயற்படுகிறார்கள் என்று உறுதியளித்தார்.

பகிரவும்...