Day: March 7, 2020
தென்கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,767ஆக உயர்வு!
அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தென் கொரியாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 6,767ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 483பேர் கொரோனா வைரசால் இன்று (சனிக்கிழமை) புதிததாக பாதிக்கப்பட்டவர்களாக இனங்காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொவான் சென்டர்ஸ் ஃபார் நோய்மேலும் படிக்க...
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல் தகனம்!
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் நியூ ஆவடி வீதியில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலையில் மரணமடைந்தார். இதையடுத்து, அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரதுமேலும் படிக்க...
தமிழ்நாட்டில் மற்றுமொரு புதிய மாவட்டம்- முதல்வர் அறிவிப்பு
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகை மருத்துவக் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “நாகைமேலும் படிக்க...
ஜனாதிபதியின் கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பாக வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. காணாமல் ஆக்கபட்டவர்கள் இல்லை என்றும் தம்மிடம் 8 பேர் மாத்திரமே கையளிக்கப்பட்டனர் என்றும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து முற்றுமுழுதான பொய் எனமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் இழப்பு?
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 80,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் படிக்க...
மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் – தமிழிசை எச்சரிக்கை!
மதக் கலவரங்களில் ஈடுபட முயல்வோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்திற்கான வரவு செலவு கூட்டத் தொடர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் உரையுடன் நேற்று ஆரம்பமாகியது. இதன்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்துமேலும் படிக்க...
கொரோனாவால் உலக முழுவதும் 1.5 கோடி பேர் இறப்பர் – பீதியை கிளப்பும் ஆய்வு முடிவுகள்
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸால் 1.5 கோடி பேர் இறக்கும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட்வர்களின் எண்ணிக்கைமேலும் படிக்க...
பட்டதாரிகள் அவசரப்பட வேண்டாம் – ஒரு மாதம் வீட்டிலிருந்து கொண்டே சம்பளத்தை எடுங்கள் – பிரதமர் மஹிந்த
நாம் தேர்தல்களை ஒருபோதும் பிற்போட மாட்டோம். பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் உடனடியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷமேலும் படிக்க...
போலி கடவுச் சீட்டுடன் சிக்கிய கால்பந்து வீரர் ரொனால்டினோ
பிரேசில் கால்பந்து அணியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ரொனால்டினோ. 39 வயதாகும் இவர் தொண்டு நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பராகுவே சென்றுள்ளார். அங்கு தனது சகோதரருடன் ஆசுன்சியோனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது பொலிஸார் அவரிடம்மேலும் படிக்க...
உலக கிண்ண இறுதி போட்டி – மனைவி ஆட்டத்தை நேரில் காண செல்லும் கணவன்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. 3 வது ஆட்டம் நாளை நடக்கிறது. இதற்கிடையேமேலும் படிக்க...
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் காலமானார்
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 24 ஆம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குமேலும் படிக்க...
மிகச்சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் கூட்டுத்திருப்பலி
வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் கூட்டுத்திருப்பலி இன்று (07) மிகசிறப்பாக இடம்பெற்றது. இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜெஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்துகொண்டு இவ் திருப்பலியினை ஒப்புக்கொடுத்தார். இங்கு புனித அந்தோனியாரின் திருச்சுருவப்பவனியும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் இழப்பு?
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 80,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் படிக்க...
வத்திகானிலும் 1வது கொரோனா வைரஸ் தொற்று!
ஆயிரம் பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட வத்திகானிலும், முதலாவது கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார். நோயாளிக்கு பரிசோதித்த பின்னர் குறித்தமேலும் படிக்க...
சிங்கப்பூர் மாணவர் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது!
மத்திய லண்டனில் சிங்கப்பூர் மாணவர் மீது இனவாதத் தாக்குதல் மேற்கொண்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 16 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் என்று கூறப்படுகின்றது. 16 வயதுடைய சிறுவன் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், 15 வயதுச் சிறுவன் அடுத்தமேலும் படிக்க...
துனிசியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே தற்கொலை குண்டுதாக்குதல்!
வட மேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் துனிஸில், அமெரிக்கத் தூதரகம் அருகே தற்கொலை படைதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். துனிஸ் நகரிஸ் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பெர்கெஸ் டுலாக் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
வேலையில்லா பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றுகிறது- பட்டதாரிகள் சங்கம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பை வழங்குவதாக கூறி, அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனவே அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரியமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கை
உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் உலகில் 80 நாடுகளில் பரவி தீவிர நிலையை அடைந்துள்ளது. கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்தைக் குறைப்பதற்கும், வைரஸ் பரவல் ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07/03/2020)
தாயகத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட ஜேர்மனியில் வசிக்கும் செல்வராஜா விஜயகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வி விதுனா 2ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை அன்று வந்த தனது பிறந்தநாளை 7ம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க...