Main Menu

தமிழ்நாட்டில் மற்றுமொரு புதிய மாவட்டம்- முதல்வர் அறிவிப்பு

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாகை மருத்துவக் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை துரிதமாகப் பரிசீலித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதனிடையே, காவிரி மற்றும் கோதாவரி நதி இணைப்புத் திட்டத்தை செயற்படுத்த அரசு விரைவான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது” என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உட்பட தற்போது 37 மாவட்டங்கள் உள்ள நிலையில் மற்றுமொரு புதிய மாவட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பகிரவும்...