Main Menu

தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல் தகனம்!

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் நியூ ஆவடி வீதியில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.

இதையடுத்து, அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சிம் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அந்தவகையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் இராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உட்பட பலர் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவரது வீட்டில் இருந்து இடம்பெற்று நியூ ஆவடி வீதியில் உள்ள வேலங்காடு மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

பகிரவும்...