Main Menu

சுவிஸில் பனிச்சரிவில் சிக்கிய ஆறு பேர் உயிருடன் மீட்பு!

சுவிஸில் பனிச்சரிவில் சிக்கிய ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி Andermatt நகருக்கு அருகில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஆறு பேர் சிக்கிக் கொண்டனர்.

குறித்த ஆறு பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுகின்றது. மீட்கப்பட்டவர்களில் நான்கு பேருக்கு காயங்கள் எதுவுமில்லை.

காயமடைந்த இருவர் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களது உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...