Main Menu

சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் ஒரே நாளில் பத்தாயிரம் பேர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 87பேர் பாதிக்கப்பட்டதோடு, 152பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் நான்கு இலட்சத்து 38ஆயிரத்து 284பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாயிரத்து 362பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 13ஆயிரத்து 322பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 432பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுதவிர இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 17ஆயிரத்து 600பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...