Main Menu

கொவிட்-19: சுவிஸ்லாந்தில் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து 50ஆயிரத்து 396பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் மொத்தமாக வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 216பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஆறாயிரத்து 924பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 103பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 180பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 496பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது,

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 41ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...