Main Menu

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு ஐவர் காயம்!

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார்.

வெள்ளை மாளிகை அருகே வீதியில் சென்றவர்கள் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ள பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...