அமேசன் காட்டுத் தீ – உதவி செய்வதற்கு G7 நாடுகள் தீர்மானம்!
அமேசன் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவி செய்வதற்கு G7 நாடுகள் முன்வந்துள்ளன.
உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது.
மேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூவெலா உள்ளிட்ட 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன.
இந்தநிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பிய அரசாங்கம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ G7 நாடுகள் முன்வந்துள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, ‘அமேசன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கூடிய விரைவில் உதவுவதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.
குறித்த நாடுகளுடன் எங்கள் குழு தொடர்பு கொண்டு வருகிறது. இதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்குவது தொடர்பான உறுதியான முடிவுகள் எடுக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.
பகிரவும்...