இலங்கை
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்
கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நாடுகளில் இருந்து வருகைத்தரும் இலங்கையர்களை தனிமைபடுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை இன்று (09) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம், வெலிகந்த காந்தகாடு மத்திய நிலையம் ஆகியன கண்காணிக்கும் மத்திய நிலையங்களாகமேலும் படிக்க...
பேருந்து விபத்தில் 18 பேர் வைத்திய சாலையில்
யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று வந்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று (09) அதிகாலை 3.15 மணியளவில் இந்த விபத்துமேலும் படிக்க...
கொரோனா குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்- தமிழக சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்- விஜயபாஸ்கர் பேட்டி கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)மேலும் படிக்க...
வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மகளிர் தின நிகழ்வுகள்!
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இலங்கையில் வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மகளிர் தினம் இன்று பல்வேறு அமைப்புக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளன. அந்தவகையில், ‘வியர்வைத் துளிகள்’ கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் தினமேலும் படிக்க...
போதைப் பொருளில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்காவிட்டால் அழிவுதான்- மைத்திரி
போதைப் பொருளில் இருந்து சமூகத்தை மீட்டெடுப்பதன் ஊடாகவே பொருளாதார ஸ்திரத்தன்மைகொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “இன்று வறுமைக் கோட்டுக்குக்மேலும் படிக்க...
இராணுவப் பிரசன்னத்துக்கு மத்தியில் முள்ளி வாய்க்காலில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை!
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும் தனவந்தர் ஒருவரும் இணைந்து இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையுடன் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர். முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் பதினோராவதுமேலும் படிக்க...
முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதுமேலும் படிக்க...
ஜனாதிபதியின் கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பாக வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. காணாமல் ஆக்கபட்டவர்கள் இல்லை என்றும் தம்மிடம் 8 பேர் மாத்திரமே கையளிக்கப்பட்டனர் என்றும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து முற்றுமுழுதான பொய் எனமேலும் படிக்க...
பட்டதாரிகள் அவசரப்பட வேண்டாம் – ஒரு மாதம் வீட்டிலிருந்து கொண்டே சம்பளத்தை எடுங்கள் – பிரதமர் மஹிந்த
நாம் தேர்தல்களை ஒருபோதும் பிற்போட மாட்டோம். பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் உடனடியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷமேலும் படிக்க...
மிகச்சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் கூட்டுத்திருப்பலி
வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் கூட்டுத்திருப்பலி இன்று (07) மிகசிறப்பாக இடம்பெற்றது. இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜெஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்துகொண்டு இவ் திருப்பலியினை ஒப்புக்கொடுத்தார். இங்கு புனித அந்தோனியாரின் திருச்சுருவப்பவனியும்மேலும் படிக்க...
வேலையில்லா பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றுகிறது- பட்டதாரிகள் சங்கம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பை வழங்குவதாக கூறி, அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனவே அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரியமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கை
உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் உலகில் 80 நாடுகளில் பரவி தீவிர நிலையை அடைந்துள்ளது. கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்தைக் குறைப்பதற்கும், வைரஸ் பரவல் ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.மேலும் படிக்க...
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைத்து புதிய கட்டமைப்பு- அநுர அறிவிப்பு
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பலமான சமூகக் கட்டமைப்பினை உருவாக்கி நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கு கொள்கையை வகுக்கத் தயாராகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்த பலமான எதிர்க் கட்சியாக தம்மை உருவாக்க மக்களின்மேலும் படிக்க...
அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக் கோரியும் மன்னாரில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட.மாகாணத்திலுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டார்கள்மேலும் படிக்க...
மீன் சின்னத்தில் களமிறங்கும் தமிழ் தேசியக் கூட்டணி?
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எமதுமேலும் படிக்க...
அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால் சர்வதேச நீதிமன்றம் செல்லப் பயப்படுவது ஏன்? – மணிவண்ணன்
இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என அரசாங்கத்திடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில்மேலும் படிக்க...
பட்டதாரிகளின் நியமனம் இடைநிறுத்தம் – முக்கிய தகவலை வெளியிட்டார் பந்துல
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையாளருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உயர்கல்வி, தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) காலை அரசாங்க தகவல் திணைக்களமேலும் படிக்க...
பிரபல பாடசாலை ஒன்றின் 50க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
வாரியபொல நகரில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 50க்கும் அதிகமான மாணவர்கள் விஷ புகையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதேச குப்பை பகுதி ஒன்றில் பரவிய தீயிணைத் தொடர்ந்து ஏற்பட்ட நச்சு புகை காரணமாக மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் எனமேலும் படிக்க...
யுத்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் – அமைச்சரவையில் ஆலோசனை
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்ப கொங்ரிட் பெனல்களினாலான நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பாக அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் காபாந்து அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 348
- 349
- 350
- 351
- 352
- 353
- 354
- …
- 434
- மேலும் படிக்க
