வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மகளிர் தின நிகழ்வுகள்!
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையில் வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மகளிர் தினம் இன்று பல்வேறு அமைப்புக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளன.
அந்தவகையில், ‘வியர்வைத் துளிகள்’ கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஏ-9 வீதியிலிருந்து கிளிநொச்சி கூட்டுறவுச்சபை மண்டபம் வரை கவனயீர்ப்புப் பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக கருத்துகளும் பரிமாறப்பட்டதுடன் தமிழ், சிங்கள மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தம் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொரோனா குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்- தமிழக சுகாதாரத்துறை முந்தைய செய்திகள்