Main Menu

மஹிந்த தலைமையில் சர்வதேச மகளிர் தின வைபவம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்ரமுல்லவில் உள்ள அபேகம என்ற இடத்தில் மகளிர் தின வைபவம் இன்று(8) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை 2020 சர்வதேச மகளிர் தின தேசிய வைபவம் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமையில் இரத்தினபுரி புதிய நகர மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் ரிக்கிரி கொப்பேகடுவ அதில் கலந்துகொள்ளவுள்ளார். பெண்களை வலுவூட்டல் நாட்டை மேம்படுத்தல் என்ற தொனிப்பொருளில் 10 ஆயிரத்துக்க மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு இதனை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு அமைவாக இன்றும் நாளையும் இரத்தினபுரி சீவலி விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் மகளிர் தொழில் முயற்சியாளர்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பகிரவும்...