Main Menu

யுத்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் – அமைச்சரவையில் ஆலோசனை

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்ப கொங்ரிட் பெனல்களினாலான நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பாக அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் காபாந்து அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக புதிய தொழில்நுட்ப நிலையான குறைந்த செலவு (ஒரு வீட்டிற்கான செலவு இலங்கை ரூபாயில் 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வீதம் ) 28,000 கொங்கிரீட் பெனல் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் தன் முதற்கட்டத்தில் 7000 வீடுகளை ஓடுகளுடனான வீடுகளாக அமைப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும், எதிர்பார்த்த வகையில் இத்திட்டத்திற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாமையின் காரணமாக ஆரம்பத்தில் 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக இலங்கை வங்கி ஊடாக காலத்திற்கேற்ற கடன்தொகையை பெற்றுக்கொள்வதற்காக திறைசேரியினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த கடன் தொகையை பயன்படுத்தி 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தகாரரான YAPKA Development (Pvt.) Ltd. என்பவருடன் வர்த்தக ஒப்பந்தமொன்று தற்பொழுது கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், 2020 பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி சம்பந்தப்பட்ட திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சமூக ஊக்குவிப்பு தோட்ட அடிப்படை வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால்  சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

பகிரவும்...