இலங்கை
“இன விரிசல் ஏற்படும் விதமாக அசாத் சாலி கருத்துரைப்பதை தவிர்க்க வேண்டும்”
இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்துவம் வகையில் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பள்ளிவாசல்களில் இருந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பொறுப்பாக பதில் கூற வேண்டிய அமைச்சர்கள்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்புக்காகவும் இந்தியா செயற்படும் – விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பு
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுக்காக இந்தியா செயற்படும் எனத் தான் எதிர்ப்பார்ப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துமேலும் படிக்க...
முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள் – ரணில்
நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தமேலும் படிக்க...
பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது
சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயண முன்னெச்சரிக்கையை தளர்த்துவதற்கு, இன்னும் காலம் தேவைப்படுவதாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் உள்ள ஐ.நா மற்றும் வெளிநாடுகளின் 43 தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கமேலும் படிக்க...
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக பெரும்மேலும் படிக்க...
தேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்
அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அத்துடன் அதன் முதலாவது கூட்டம் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும்
ஞானசார தேரரின் பொது மன்னிப்பு மீதான விடுதலை சரியா பிழையா என்பதை விட இது ஜனாதிபதியுடைய மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகின்றது. அதேபோல இலங்கையில் இருக்கின்ற வட கிழக்கு, மலையகம் உட்பட உள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ஆவண செய்யமேலும் படிக்க...
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ள மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ம் திகதி வியாழக்கிழமை புதுடில்லியில் நடைப்பெறவிருக்கும் இந்நிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துக் கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி செயலக பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெள்ளியன்று மோடியுடன் தொலைபேசியில் தொடர்புக்மேலும் படிக்க...
நிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷாத்
வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 05 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்மேலும் படிக்க...
பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கை அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் – அசாத் சாலி
இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை
உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம்மேலும் படிக்க...
கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அவசர காலச்சட்டம் நீடிப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்காவில் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கின்ற பிரேரணை- 14 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டத்தை மே 22மேலும் படிக்க...
சிறிலங்கா, அமெரிக்கா இராணுவ ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள்; அமெரிக்கா கோரிக்கை
சிறிலங்காவுடன், புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும், 1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா முற்படுவதாகவும், அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர்மேலும் படிக்க...
வித்தியா கொலை குற்றவாளிக்கு உதவிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை தப்பிக்க உதவினார் என்று, மூத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிராகவே சட்டமா அதிபரின்மேலும் படிக்க...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்; தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட எதிர்ப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் நடத்தப்படுவதற்கு முன்னர், வெளியிட வேண்டாம் என்று ஜேவிபி கோரியுள்ளது. ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்கமேலும் படிக்க...
வரும் ஆண்டுகளில் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம் – மோடிக்கு சம்பந்தன் வாழ்த்து
இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன். மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நடந்தமேலும் படிக்க...
ஞானசார தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்
கலபொட அத்தே ஞானசார தேரரின் தாயார் நேற்று (23) இரவு தேரர் அவர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் மியன்மாரில் கைது
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேரைக் கொல்லப்பட்டனர். 39 வயதுடையமேலும் படிக்க...
நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு விடுதலை சுதாகரன் விடயத்தில் பாகுபாடு ஏன்?
நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருசனையும் காட்டாது உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜ சபையில் தெரிவித்தார். அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்குமேலும் படிக்க...
ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைக் வன்மையாகக் கண்டிக்கின்றோம் ; த.தே.கூ
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த குற்றத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர் சிறையிலிடப்பட்டார். கற்றறிந்த நீதவான்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- …
- 257
- மேலும் படிக்க