Main Menu

பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கை அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் – அசாத் சாலி

இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பாதுகாப்புப் பிரிவினர் முஸ்லிம் பள்ளிவாசல்களில் மேற்கொள்ளும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தான் பாதுகாப்பு சபையில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒரே பள்ளிவாசலில் ஏழு முறைகள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்க பாதுகாப்பு பிரிவினர் செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் படையினர் பள்ளிவாசல்களுக்குள் பாதனிகளுடனும் நாய்களுடன் செல்கின்றனர். நாயைக்கொண்டு தேடுதலில் ஈடுபடவுள்ளதாக முன்னறிவிப்புச் செய்திருந்தால், தாம் அதற்கு ஏற்ற வகையில் ஒழுங்குகளை செய்துகொடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் படையினர் அவ்வாறு செய்வதில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தான் பாதுகாப்பு சபையில் இது குறித்து பேசவுள்ளதாகவும் இது போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடாது எனவும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...