Main Menu

இலங்கைக்கு எதிரான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் ஆகியன குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு விளக்கமளித்தார். இதன்போது பிரதமர் இவ்வாறு கேட்டுக்கொண்டார். 
இச்சந்திப்பு நேற்று(24) மாலை அலரி மாளிகையில் நடைபெற்றது

பகிரவும்...