Main Menu

நிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷாத்

வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் 05 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 2014/2015 ஆம் ஆண்டுகளில் லக் சதோசவில் இடம்பெற்ற 257,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலான விசாரணைக்கு வாக்குமூலம் வழங்கவே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்தார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய பின் சற்றுமுன் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...