இலங்கை
மியன்மாரில் தடுத்து வைக்கப் பட்டுள்ள 15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு
மியன்மாரில் கைதுசெய்யப்பட்டு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதுவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மியன்மார் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததையடுத்து 15மேலும் படிக்க...
தமிழர்களை பயங்கர வாதிகளென அடையாளப் படுத்தி முன்னெடுக்கும் அரசியல் நாட்டை அழிவுக்குள் தள்ளும் – அருட்தந்தை மா.சக்திவேல்
தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சக்திவேல் இன்றுமேலும் படிக்க...
மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் – எம். ஏ.சுமந்திரன்
மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இழுவை மடி தொடர்பில் நான் கொண்டு வந்தமேலும் படிக்க...
கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப் பட்டிருந்த மேலும் 8 இலங்கையர்கள் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைப்பு
கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டு மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 8 பேரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 6 ஆண்களும்மேலும் படிக்க...
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்பு பட்டவர்களை உள் வாங்காமல் உருவாக்கப் பட்டதே ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் ரணிலுக்கு பதிலடி
ஐக்கிய மக்கள் சக்தி என்பது மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்களை உள்வாங்காமல் உருவாக்கப்பட்ட கட்சி என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களை கட்சி தவிர்த்துக்கொண்டது அவர்களை உள்வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி சூத்திரதாரிகளைமேலும் படிக்க...
நீண்ட தூர பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் திருடும் கும்பல் தொடர்பில் வெளியான தகவல்!
தமிழ், சிங்கள புத்தாண்டு முன்னிட்டு நீண்ட தூர பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பெறுமதியான பொருட்களைத் திருடும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் ,பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.ப பதுளைமேலும் படிக்க...
தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன ? வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் எழுத்தில் தெரிவியுங்கள் – பெரும்பான்மையின ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்
பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ் மக்களின்மேலும் படிக்க...
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு
ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு செவ்வாய்க்கிழமை (09) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கின்றது. இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமயமேலும் படிக்க...
சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
பண்டிகை காலத்தை முன்னிட்டு பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலைக் குறைப்பு நேற்று திங்கட்கிழமை (08) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. விலை விபரங்கள் வருமாறு: ஒரு மேலும் படிக்க...
வீதியில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் – வஜிர எச்சரிக்கை
வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணையை மீள செலுத்தும் முறையை ரணில் விக்ரமசிங்க அந்த நாடுகளுக்கு தெரிவித்திருக்கிறார். அதனால் அந்த முறையை யாராவது மாற்றியமைக்க முயற்சித்தால் மீண்டும் நாங்கள் அனைவரும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதனால் எமது நாட்டை சர்வதேசமேலும் படிக்க...
இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும், கச்சத்தீவு இழப்புக்கும், மீனவர் பிரச்சினைக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தான் பொறுப்பு-“- ராஜ்நாத் சிங் விமர்சனம்
இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாக கொடுத்த காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் தமிழர் உரிமைகள் குறித்துப் பேச தகுதியில்லை என இந்திய பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம். ரமேஷ் கோவிந்த்தை ஆதரித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்மேலும் படிக்க...
அநுராதபுரம் சிறைச் சாலையில் இரு தரப்பினர் மோதல் ; மூவர் வைத்திய சாலையில்!
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரைப் பார்வையிடச் சென்ற இருவருக்கும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (4) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம்மேலும் படிக்க...
யாழ். இந்திய துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு
இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அண்மையில், மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஈழத்தமிழர்களது அரசியல் நலன்சார் விடயங்கள்மேலும் படிக்க...
தமிழ்க் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும் – யாழில் அநுரகுமார
நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமைமேலும் படிக்க...
தேர்தல் முறை சீர்திருத்தம் எதிர்வரும் தேர்தல்களுடன் தொடர்புபடுத்தாது : ஜனாதிபதி, நீதி அமைச்சர் உறுதி அளித்ததாக மனோ தெரிவிப்பு
தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்புபடுத்தாது. இவ்விவகாரம் புதிய பாராளுமன்றத்துக்கு ஒத்தி வைக்கப்படும். அது பற்றி புதிய பாராளுமன்றத்தில் கலந்து உரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் தனக்கு உறுதிமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மல்கம் ரஞ்சித்திற்கு முன் கூட்டிய எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை – கத்தோலிக்க திருச்சபை
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித்தி;ற்கு முன்கூட்டிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தது என வெளியாகியுள்ள ஊகங்கள் முற்றிலும் தவறானவை என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தைமேலும் படிக்க...
விசாரணையின் பின்னர் விடுதலை – குடும்பத்துடன் இணைந்தனர் முருகன் ரொபேர்ட் பயஸ் ஜெயக்குமார்
கொழும்பை வந்தடைந்த முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும்பு விமானநிலையத்தில் பலமணிநேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சில நிமிடங்களிற்கு முன்னர் அவர்களை விடுதலை செய்தனர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் வரைமேலும் படிக்க...
கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி எனமேலும் படிக்க...
மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின் ஆட்சி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம் – உயிர்த்த ஞாயிறு தின செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது உயிர்த்தஞாயிறு தினத்திற்கான செய்தியில் இதனை தெரிவித்துள்ளது. நாடு கடும்மேலும் படிக்க...
தந்தைக்கு நீதி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த கெஹலியவின் மகள்
தரமற்ற மருந்து கொள்வனவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இன்று புதன்கிழமை (27) காலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 256
- மேலும் படிக்க