Main Menu

மியன்மாரில் தடுத்து வைக்கப் பட்டுள்ள 15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு

மியன்மாரில் கைதுசெய்யப்பட்டு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட  15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனை யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதுவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மியன்மார் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததையடுத்து 15 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...