Author: trttamilolli
ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி மக்ரோன் 40 புள்ளிகள் செல்வாக்குடன் உள்ளார்.மேலும் படிக்க...
மார்செயில் வாள் வெட்டு தாக்குதல்! – இருவர் படுகாயம்! – சந்தேக நபர்கள் கைது!
மார்செயில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு, மார்செயின் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Louis பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுததாரிகள் இருவர், இரவு 10.30 மணிமேலும் படிக்க...
சூடான்: நெருக்கடி தீவிரம் அடைவதால் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை கோரும் போராட்டக் காரர்கள்
சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே, நேற்று (சனிக்கிழமை) இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்து வருவதால்மேலும் படிக்க...
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி -மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-சில விஷமிகள், ஆளுநரின் பெயரில் போலியாக சில மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி,மேலும் படிக்க...
பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சி மாநாட்டிலிருந்து மியன்மார் இராணுவ தளபதி நீக்கம்
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டிலிருந்து மியன்மாரின் இராணுவ தளபதி நீக்கப்பட்டுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் அவருக்கு பதிலாக மியன்மாரில் அரசியல் சார்பற்ற பிரநிநிதி ஒருவரை உச்சிமாநாட்டில் இணைத்துக்கொள்ள இணங்கியுள்ளது. மியன்மாரின் அதிகாரத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தமேலும் படிக்க...
முல்லைத்தீவில் ஆரம்பித்த கடல் வழி போராட்டம் யாழில் நிறைவு!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை 9.30 மணியளவில் வந்தடைந்தது. இழுவை மடி மீன்பிடிமேலும் படிக்க...
நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் கோரிக்கை!
பண்டேரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு 3 தகவல் அறியும் உரிமை விண்ணப்பப்படிவங்களைத் தாக்கல் செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கே இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 1975மேலும் படிக்க...
இரு வாரத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சரிந்த சுற்றுலாத் துறை இப்போது படிப்படியாக மீண்டு வருகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தமேலும் படிக்க...
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் – சசிகலா
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை இராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் எம்ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றிய சசிகலா, நாம் ஒன்றாகமேலும் படிக்க...
ஆப்கான் ஷியா மசூதி தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது!
ஆப்கானிஸ்தானின் ஷியா மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 47பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்ததுமேலும் படிக்க...
சீன ஜனாதிபதி ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகம்!
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் இரண்டாவது பொருளாதார சக்தியான சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங், காலநிலை உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லைமேலும் படிக்க...
மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தெரிவு !
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொதுமேலும் படிக்க...
பசி பட்டியலில் இந்தியாவிற்கு 101 ஆவது இடம்!
உலக நாடுகளின் பசிப் பட்டியலில் இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாடு, குழந்தைகளின் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்னி ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு 94 ஆவது இடத்தில் இருந்தமேலும் படிக்க...
அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது – மனோ
ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலைமேலும் படிக்க...
இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது – வேலுகுமார்
2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்குமேலும் படிக்க...
விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மைத்திரி
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்மேலும் படிக்க...
வெளிநாட்டு வங்கிகளில் பாகிஸ்தானுக்கு அதிக கடன்: உலக வங்கி தகவல்
2022-ம் ஆண்டுக்கான சர்வதேச கடன் புள்ளியியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய 10 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கொரோனாமேலும் படிக்க...
தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம்- ஆய்வுத்தகவல்
முழங்கையில் இருமுவதும் அல்லது முகத்தை திருப்பிக்கொண்டு இருமுவதும் வெளியே கொரோனா பரவுகிற வாய்ப்பைக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுகள் தொடருகின்றன. அந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இதில்மேலும் படிக்க...
மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் மருத்துவமனை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாகவும், முன்னேறி வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங்இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 12-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சுச் திணறல் காரணமாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- …
- 827
- மேலும் படிக்க