Main Menu

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் – சசிகலா

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை இராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் எம்ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றிய சசிகலா, நாம் ஒன்றாக வேண்டும், அ.தி.மு.க. வென்றாக வேண்டும் என சூளுரைத்தார்.

அ.தி.மு.க.வுக்கு தம்மால் எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காகதான் அமைதியாக இருந்ததாக சசிகலா கூறினார்.

பகிரவும்...