Main Menu

ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி மக்ரோன் 40 புள்ளிகள் செல்வாக்குடன் உள்ளார். குறிப்பாக இளைஞர்களிடம் (18-24 வயது) அதிக செல்வாக்குடன் மக்ரோன் உள்ளார்.

முன்னதாக செப்டம்பர் மாதத்திலும் ஜனாதிபதி செல்வாக்கு அதிகரிப்பை சந்தித்திருந்தார்.

அதேவேளை, பிரதமர் Jean Castex உம் செல்வாக்கு அதிகரிப்பை சந்தித்துள்ளார்.

இந்த கருத்துக்கணிப்பை JDD நாளிதலுக்காக Ifop நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மேற்கொண்டிருந்தது.  

பகிரவும்...