Main Menu

சூடான்: நெருக்கடி தீவிரம் அடைவதால் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை கோரும் போராட்டக் காரர்கள்

சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே, நேற்று (சனிக்கிழமை) இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்து வருவதால் போராட்டக்காரர்கள் இராணுவ ஆட்சிக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் அல் பஷீரின் ஆதரவாளர்கள் என கூறப்பட்டவர்களின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை முறியடிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் நெருக்கடி மேலும் மோசமாகிவிட்டது.

2019ஆம் ஆண்டு ஒமர் அல் பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின், சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை என அழைக்கப்படும் கூட்டமைப்புதான் சூடானை ஆட்சி செய்து வருகிறது.

இந்த கூட்டமைப்பு ஒமர் அல் பஷீருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...