Day: September 9, 2020
தி.மு.க. பொதுச் செயலாளராக துரைமுருகன்- பொருளாளராக டி.ஆர்.பாலு தெரிவு
தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து தி.மு.க. பொதுக்குழுமேலும் படிக்க...
ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்திய விமானப் படையில் இணைக்கப் படவுள்ளன!
பிரான்ஸிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் நாளை (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படவுள்ளன. குறித்த ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக 5 விமானங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்த விமானங்கள் 17 ஆவது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்படவுள்ளன.மேலும் படிக்க...
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து உலகின் முதல்நிலை வீராங்கனை விலகல்!
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி கொரோனா அச்சத்தால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார். இந்த நிலையில் எதிர்வரும்மேலும் படிக்க...
சுயாதீன விசாரணைக்கு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா!
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் விடயம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்துவதற்கு ஒத்துளைக்குமாறு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் வழங்கப்பட்டமை ஜேர்மனியால் உறுதிப்படத்தப்பட்டுள்ளதைமேலும் படிக்க...
சூடானில் வெள்ளப்பெருக்கு – மூன்று மாதகால அவசர நிலை பிரகடனம்!
சூடானில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு மூன்று மாதகால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சூடானில் ஏற்பட்டுள்ள கடும் வௌ்ளம் காரணமாக பழைமை வாய்ந்த பிரமிட்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சூடானில் நைல்நதிமேலும் படிக்க...
20 ஆவது திருத்தம் நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டு வரப் படவில்லை
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்மொழியப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற விதி நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரபடவில்லை என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
மகாவம்சத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற கருத்துக்கு டயனா கமகே கடும் எதிர்ப்பு
மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அன்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்க்காணல் ஒன்றைமேலும் படிக்க...
தீர்வு விடயத்தில் இந்தியாவை அணுகுவதை போலவே மீனவர் பிரச்சினைக்கும் அவர்களிடம் செல்லுங்கள் – சபையில் வாசுதேவ
வடக்கிற்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இந்திய மீனவர்களின் அத்து மீறல் விவகாரம் தொடர்பாகவும் இந்திய அரசை அணுகுமாறு வாசுதேவ நாணயக்கார கடும் தொனியில் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உற்பத்தி வரி (சட்டத்தின் கீழான 09மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி – ஹக்கீம் வெளியிட்ட தகவல்
ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் சஹ்ரான் ஹாசிமுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளைமேலும் படிக்க...
இந்திய சிறையில் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார் : லண்டன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவிப்பு!
பிரபல தொழிலதிபர் நிரவ்மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் இந்திய சிறையில் அவர் தற்கொலை செய்துக்கொள்ளும் ஆபத்து உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடுகடத்துமாறு தொடரப்பட்ட வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.மேலும் படிக்க...
மக்கள் ஆணையை புறந்தள்ளி விட முடியாது – கெஹலிய
அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை விரிவாக நீக்குவதற்காக மக்கள் வழங்கியுள்ள ஆணையை புறம் தள்ள அரசாங்கம் தயாரில்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்மேலும் படிக்க...
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான அறிவித்தலை வெளியிட்டது மத்திய அரசு!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாடலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பாடலைகள் மீளத்திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிக்காட்டல் நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பாடசாலைகளை திறப்பதற்கு முன்பாக அனைத்து பகுதிகளும் முழுமையாக மேலும் படிக்க...
ஆவரங்காலில் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை!
ஆவரங்காலில் உள்ள வீடொன்றில் குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டை உடைத்து 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை ) இடம்பெற்றது என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சர்ச்சைகளுக்கு மத்தியில் கூடும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே கருத்து முரண்பாட்டு நிலைமேலும் படிக்க...
உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் சீனாவின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு!
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், சீனாவின் ஏற்றுமதி கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 9.5 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. சீனா கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ரூ.17.64 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டுமேலும் படிக்க...
ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின்
ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என ஒசாமா பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடினின் மகள் நூர் பின்லேடின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயேமேலும் படிக்க...
கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது – ட்ரம்ப்!
கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மெரிக்காவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படுவது குறித்து கமலாமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி குணமடைவு!
கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு, முதல் முறையாக இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி, முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். போலந்தின் தெற்குப் பகுதியிலுள்ள டைஷி நகர மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கிரெகோா்ஸ் லிபின்ஸ்கிக்கு (45), இரு நுரையீரல்களும் மிகக்மேலும் படிக்க...