Main Menu

தி.மு.க. பொதுச் செயலாளராக துரைமுருகன்- பொருளாளராக டி.ஆர்.பாலு தெரிவு

தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3,500 பேர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உட்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தி.மு.க. பொதுச்செயலாளர், பொருளாளராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட துரைமுருகன், டி.ஆர்.பாலுவிற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தி.மு.க.வின் 4வது பொதுச்செயலாளராக துரைமுருகனும் 8ஆவது பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...