Main Menu

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து உலகின் முதல்நிலை வீராங்கனை விலகல்!

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி கொரோனா அச்சத்தால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி பெரிஸ் நகரில் ஆரம்பமாகவுள்ள ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த 24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு ரோலண்ட் கரோஸில் நடந்த போட்டியில் மார்க்கெட்டா வொண்ட்ரூசோவாவை தோற்கடித்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...