Main Menu

2009ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை: விமலவீர திஸாநாயக்க

2009ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை துப்பாக்கிதான் இருந்தது என வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ், முஸ்லிம் மக்கள் தங்கள் தலைவர்களின் கதையைக் கேட்டு அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தனர். இது முதல் தடவையல்ல .

தமிழ் இளைஞர்களை போன்றுதான் ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் சிங்கள இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இதனால் அறுபது ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து நீங்கள் பெற்ற பயன் என்ன? நான் கிழக்கு மாகாண சபையில் கல்வியமைச்சராக இருந்தவேளை மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்திருக்கிறேன்.

தற்போதைய ஜனாதிபதியை கொண்டுவந்தவர்கள் சிங்கள மக்கள். ஆனால் இப்போது தமிழர்களும் முஸ்லிம்களும் வேலைவாய்ப்பு தாருங்கள், அபிவிருத்தி செய்து தாருங்கள் என்று இப்போது எம்மிடம் வருகிறார்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களித்துவிட்டு வாருங்கள் அனைத்தையும் பெற்று தருவோம்” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...