Main Menu

அவசரகால நிலையினை நீடிக்காதிருக்க தீர்மானம்

பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட டித்வா புயல் பேரழிவு காரணமாக மீட்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் நாட்டில் பொது அவசர கால நிலை அமுல்படுத்தப்பட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.