Main Menu

போராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பன்னிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்!

பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், பனிரெண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

கடந்த 5ஆம் திகதி பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் முடங்கிப் போயிருந்தன.

எனினும், அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிராகரித்து போராட்டத்தைத் தொடருவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில், பனிரெண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று (திங்கட்கிழமை) மூன்றில் ஒரு ‘ரயில் ஏ கிராண்டே விட்டெஸ்’ சேவைகள் இடம்பெற உள்ளன.

மேலும், இதுதவிர ‘சொசைட்டி நேஷனல் டெஸ் கெமின்ஸ் டி ஃபெர் ஃபிராங்காய்ஸ்’ பத்தில் நான்கு சேவைகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று கனரக வாகனங்களை இயக்கும் நான்கு தொழிற்சங்கங்கள் தங்கள் சாரதிகளை இந்த போராட்டத்துக்கு அழைத்துள்ளன.

போராட்டத்திற்கு பின்னர், இதுவரை 85 வீத போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது. இதற்கிடையில் போராட்டத்தை கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு இடைநிறுத்தம் செய்யுமாறு தேசிய ரயில்வே நிர்வாகம் தங்களது ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து, தேசிய ரீதியில் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்ததற்கு அமைய, கடந்த 5ஆம் திகதி முதல் பிரான்ஸின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...