Main Menu

நீண்ட நாட்களாக நீண்ட ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை தோல்வி!

ஸ்பெயினில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மெட்ரிட் நகரில், 12 நாட்களாக நடைபெற்றுவந்த ஐ.நா. மாநாடு எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நோக்கில், சுமார் 200 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுவதில் வளர்ச்சியடைந்த நாடுகள் போதிய அக்கறை காட்டாததால், வரைவு ஒப்பந்தத்தை ஏராளமான நாடுகள் நிராகரித்ததாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பூமி வெப்பமயமாதலுக்கு காரணமான பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதிலும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உதவுவதிலும் பெரிய நாடுகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பேச்சுவார்த்தையின் இறுதியில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

கார்பன் டை ஒக்சைட் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து அடுத்த ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றத்தால் பூமி வெப்பமயமாகும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக நடைபெற்ற 25 ஆண்டுகால பருவநிலை பேச்சுவார்த்தையில், நீண்ட நாட்களாக நடந்த பேச்சுவார்த்தை இதுவே ஆகும்.

பகிரவும்...