Main Menu

நல்லூரிலுள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு நாசம்

யாழ்.நல்லூர் முத்திரை சந்தியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு, விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு முற்றாக  எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கிட்டுப்பூங்கா தீ பற்றி எரிவதனை கண்ட அப்பிரதேச மக்கள், உடனடியாக யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.

ஆனாலும் அவர்கள், வேறொரு பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்தமையால், நல்லூர் முத்திரை சந்திக்கு வருவதற்கு தாமதமாகியுள்ளது. இதனால் கிட்டுப்பூங்காவின் முகப்பு  முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...