Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.சுகிர்தமலர் செபமாலை (சமூக செயற்பாட்டாளர்) 07/09/2020

தாயகத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் செங்கலடி எல்லை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுகிர்தமலர் செபமாலை அவர்கள் 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற செபமாலை அரியமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும் காலம் சென்ற பொன்னையா காளியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் காலம் சென்ற தங்கவேல் அவர்களின் அன்பு மனைவியும் ஞானமலர் (சுவிஸ்) ரவீந்திரன் (கனடா) ஜீவராஜன் (இலங்கை) சுதர்சன் (சுவிஸ்) ஸ்ரீதரன் (சுவிஸ்) ஆகியோரின் சகோதரியும், சுரேஷ்சந்தர் (காணாமல் ஆக்கப்பட்டவர்) நிலாவதனி (இலங்கை) வான்மதி (இலங்கை) முரளிதரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலம்சென்ற நல்லையா மற்றும் சகாயராணி , ஜெகதாம்பாள், செல்வராணி , சோபனா, சகாயநாதன், கலைஅமுதா ஆகியோரின் மச்சாளும் நந்தகுமார் மகாலிங்கம் மாறன், சாந்தினி ஆகியோரின் மாமியாரும் றேக்கா , தர்சன், கிஷானி, கிஷான், பிரகாஷ், சகானா, விதுஷனா , டிருஷான் , மெஷரிக்கா, கெவின் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07.09.2020 திங்கட்கிழமை செங்கலடி பொது மயானத்தில் மாலை 4.00 மணிக்கு மணிக்கு நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவுத்துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் !

பகிரவும்...