Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார் (18/01/2020)

கைலாசபிள்ளை ஜெயக்குமார் (ஓய்வு பெற்ற மாநகர சபை ஊழியர்) அவர்கள் 9ம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை காலமானார் என்பதை அறியத்தருகின்றோம்.

தாயகத்தில் அரியாலை புங்கன் குளத்தைச் சேர்ந்த பிரான்சை வதிவிடமாக கொண்ட கைலாசபிள்ளை ஜெயக்குமார் (ஓய்வு பெற்ற மாநகர சபை ஊழியர்) அவர்கள் 9ம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திரு.திருமதி.கைலாசபிள்ளை பிறிசிலா தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற வினாயகமூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், காந்தி மலரின் அன்புக் கணவரும், புஷ்பராணி (பேபி சிவா TRT நேயர்) தெய்வ லதா (பவா) பிரேமலதா (குட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், காலம்சென்ற சுகுமார், சிவகுமார், சூரியகுமாரி மற்றும் சந்திரகுமார் (யாழ்ப்பாணம்), ரூபா குமாரி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு சகோதரரும் சிவகுமார், சுப்ரமணியம், லோக ராஜாவின் மாமனாரும் காலம்சென்ற கனக விநாயகம், சந்திரகாந்தன், சாந்த குமார் மற்றும் ஜெயகாந்தன் (யாழ்ப்பாணம்) விஜய காந்தன் (ஐக்கிய இராச்சியம்) சோதிமலர்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனரும் , அஸ்வின், அலெக்சன், சாகிஷன், சபிஷா, சதூஷா, சாய்சரண் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடலை பார்வையிடுவதற்கான நேரம் 18ம் திகதி 19ம் திகதி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3 மணி தொடக்கம் 4 மணி வரை,

MAISON FUNÉRAIRE DE VILLETANEUSE
Funérarium
95 rue Marcel Sembat
93430 Villetaneuse

எனும் முகவரியில் பார்வையிடலாம்.

20ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணி தொடக்கம் 12 மணி வரை அதே முகவரியில் கிரியைகள் இடம்பெற்று மதியம் 1h30 மணி அளவில் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

தகவல்: சகோதரர் சோதி குடும்பத்தினர்

மருமகன் சிவா – 0033 (0)6 64 66 71 41

மருமகன் ரவி – 0033 (0)6 52 33 96 85

மகள் குட்டி – 0033 (0)7 81 39 91 88

இப் பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது

பகிரவும்...