Day: September 7, 2020
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: டேனிஸ் ஷபலோவ்- நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், நான்காவது சுற்றுப் போட்டியில், டேனிஸ் ஷபலோவ், போர்னா கோரிக், நவோமி ஒசாகா, ஷெல்பி ரொஞர்ஸ் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில், கனடாவின்மேலும் படிக்க...
புகழ்பெற்ற தீர்ப்பு தொடர்பான வழக்கின் மனுதாரரான துறவி கேசவானந்த பாரதி காலமானார்!
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய புகழ்பெற்ற தீர்ப்பு தொடர்பான வழக்கின் மனுதாரரான துறவி கேசவானந்த பாரதி (வயது-79) காலமானார். அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளில் இவரது வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே அடிப்படையாக மேற்கோள் காட்டப்படுகிறது.மேலும் படிக்க...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழில் கொள்கையை அறிவித்தது தமிழக அரசு!
மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
தங்கம் விலை குறையும் வாய்ப்பு: ஜனாதிபதியின் அதிரடி சலுகை அறிவிப்பு!
தங்கம் மீதான 15 வீத இறக்குமதி வரியையும், இரத்தினம் மற்றும் நகை உற்பத்தியாளர்களின் வருமான வரி 14 வீதத்தையும் நீக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்று (திங்கட்கிழமை) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1971ஆம் ஆண்டுமேலும் படிக்க...
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் தொடர்ந்த வழக்கு விசாரணை மீண்டும் லண்டன் நீதிமன்றில் ஆரம்பம்
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறாத நிலையில், மீண்டும் ஆரம்பமாகும் வழக்கின்மேலும் படிக்க...
மக்களுக்கும் 20ஆவது திருத்தத்தில் உள்ள ஆபத்து நன்றாகவே தெரியும்- மனுஸ நாணயக்கார
அரசாங்கத்துக்கு வாக்களித்த, சுயநினைவுள்ள அனைத்து மக்களுக்கும் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ள ஆபத்து நன்றாகத் தெரிந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஸ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், 69 இலட்சம்மேலும் படிக்க...
பெலரஸ்ஸில் எதிர்க்கட்சியின் போராட்டங்களுக்கான தலைவி கடத்தப்பட்டார்!
பெலரஸ்ஸின் எதிர்க்கட்சி போராட்டங்களுக்கான தலைவி மரியா கொலெஸ்னிகோவா (Maria Kolesnikova) இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. ஓகஸ்ட் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் 633 அரசாங்க எதிர்ப்பாளர்களை பாதுகாப்புப் படையினர் கைதுசெய்த சில மணி நேரங்களிலேயே இந்தமேலும் படிக்க...
வைரஸ் தொற்றிலிருந்து மீண்டார் எஸ்.பி.பி.- செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது!
தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள தனது தந்தைக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
ஜப்பானை அச்சுறுத்தும் சூறாவளி – 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றம்
ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில், 8.1 இலட்சம் மக்களை அந்நாட்டு அரசு அங்கிருந்து வெளியேற்றியுள்ளது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்குமேலும் படிக்க...
பர்மிங்காம் நகர மையத்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, ஏழு பேர் காயம்!
இங்கிலாந்தின் பர்மிங்காம் (Birmingham) நகர மையத்தில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில்இ குறித்த தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரியை பொலிஸார் தேடிவருகின்றனர். பர்மிங்காம் நகர மையத்தில் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம்: பலர் காயம்மேலும் படிக்க...
மும்பையில் நிலநடுக்கம் : கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!
மும்பையில் இன்று (திங்கட்கிழமை) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரின் வடக்குப் பகுதியில் 102 கிமீ தொலைவில் 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்மேலும் படிக்க...
இனவாதத்தை எதிர்கொள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ அழைப்பு
தமிழ்த்தேசிய சக்திகள் ஒன்றிணைத்து, இனவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை), யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
சீனாவுக்கான புதிய தூதுவராக பாலித கோஹன நியமனம்
சீனாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சு அவரது நியமனம் தொடர்பான விபரங்களை உயர் பதவிகள் குறித்த குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன், ஐக்கியமேலும் படிக்க...
செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவேந்தல்!
யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.சுகிர்தமலர் செபமாலை (சமூக செயற்பாட்டாளர்) 07/09/2020
தாயகத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் செங்கலடி எல்லை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுகிர்தமலர் செபமாலை அவர்கள் 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற செபமாலை அரியமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும் காலம் சென்ற பொன்னையா காளியம்மா தம்பதிகளின் பாசமிகுமேலும் படிக்க...