Main Menu

கிரேட்டா தன்பெர்க் ‘வாழ்வாதார உரிமை விருது’க்கு தேர்வு

ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என முழங்கிய 16 வயது நிரம்பிய சிறுமிக்கு நோபலுக்கு நிகரான ‘மாற்று நோபல் விருது’ வழங்கப்பட உள்ளது.

அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடுட்டில் கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 23) ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற  16 வயது சிறுமி (பருவநிலைமாற்ற ஆர்வலர்) பங்கேற்றார்.
அந்த மாநாட்டில் பேசிய அந்த சிறுமி உலகநாட்டு தலைவர்களை நோக்கி “பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?” என ஆக்ரோஷமாக முழங்கினார். அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் ‘வாழ்வாதார உரிமை விருது’-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் ‘வாழ்வாதார உரிமை விருது’ நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படுவதால் இது ‘மாற்று நோபல் விருது’ என்றும் அழைக்கப்படுகிறது.
கிரேட்டா தன்பெர்க் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘வெள்ளிக்கிழமைகள் எதிர்காலத்திற்கானது’ என்ற இயக்கத்தின் பெயரில் ‘பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகள் வேலைநிறுத்தம் செய்கின்றன’ என்ற பதாகைகளுடன் ஸ்விடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.

 கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவருக்கு வழங்கப்படவிருக்கும் விருது

 இந்த போராட்டத்தின் வளர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ‘உலக பருவநிலைமாற்ற போராட்டம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் 150-க்கும் அதிக நாடுகளில் பருவநிலைமாற்ற ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலத்தரப்பட்ட மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு சென்று ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவு குரல்களை வெளிப்படுத்த காரணமாக இருந்து உலக தலைவர்கள் மத்தியில் நிலைமையை எடுத்து கூறியதற்காக கிரேட்டா தன்பெர்க்கு ‘மாற்று நோபல் விருது’ என அழைக்கப்படும் ‘வாழ்வாதார உரிமை விருது’ வழங்கப்படுவதாக இந்த விருது வழங்கும் வாழ்வாதார அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பகிரவும்...