Main Menu

இரு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கான உதவி கோரல்..

புளியங்குளம் இந்துக் கல்லூரியில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனான ஜெகதீஸ்வரன் பவித்திரன் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றார். இவருடைய இரு சிறுநீரகங்களையும் உடனடியாக மாற்றவேண்டும் என்றும் அதற்கு பல லட்சம் ரூபா நிதி தேவையென மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இவருடைய தந்தை கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற செல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் தாயாரும் ஒரு சகோதரியும் மட்டும் நிர்க்கதியான நிலையில் உள்ளனர். யுத்தத்தின் காரணமாக தனது கணவரை மட்டுமன்றி வீடு உள்ளிட்ட சொத்துக்களையும் இழந்து தற்போது நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மேற்படி மாணவன் பவித்திரனின் தாயார் ஜெ.இராசசிறி தெரிவித்துள்ளார்.

எனவே, தனதும் தனது ஒரே மகளான எட்டு வயதுடைய விதுசனாவினதும் எதிர்காலம் தற்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள மகனான பவித்திரனின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது என்றும் இதனால், தனது மகனின் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு உதவுமாறும் அவர் பரோபகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவருக்கு உதவிசெய்ய விரும்புபவர்கள் மக்கள் வங்கியின் வவுனியா கிளையிலுள்ள 040200251615866 என்ற கணக்கிலக்கத்திற்கு பணத்தை வைப்புச் செய்து உதவ முடியும். இந்தக் குடும்பத்துடன்
077-5278620 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தொடர்புகொண்டு உதவ முடியும்.
புலம்பெயர் தேசத்தில் ஆடம்பரங்களுக்கும் களியாட்டங்களுக்கும் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்கின்ற தாயகத்து உறவுகள் இந்த மாணவன் போன்று ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

5939881

2858089

 

பகிரவும்...