இலங்கை
சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு
கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று( 12-04-2019 )பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனையமேலும் படிக்க...
பொன்சேகாவுக்கு புதிய பதவி?
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்கு மாறு, அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்திலேயேமேலும் படிக்க...
புதிய கட்சி ஒன்றை உருவாக்கியது ஏன் – மஹிந்த விளக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லைமேலும் படிக்க...
நாளை முதல் 05 தினங்களுக்கு சிறைக்கைதிகளை பார்வையிடலாம்
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாளை (13) முதல் 05 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிறையில் உள்ளவர்களை தங்களது உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு நாட்களே வழங்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது. மேலும் படிக்க...
இலங்கை – உலக வங்கிக்கிடையில் இரு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கைக்கும் உலக வங்கிக்குமுடையில் நேற்றைய தினம் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும், சிறு விவசாயகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் தொடர்புடையவை. இரு உடன்படிக்கைகளும் 15 கோடி டொலர்மேலும் படிக்க...
பொதுமக்களுக்கு காவல் துறை விசேட அறிவித்தல்
புத்தாண்டு காலங்களில் நகரங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர். தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நேற்றையதினம் கொழும்பு நகருக்கு வாகனங்களில் வந்த பொதுமக்களின் வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்ந்து இடம்பெறாமல்மேலும் படிக்க...
பிறப்பதற்கு முன்பே குழந்தையை இழந்துள்ள சோகம்
மருத்துவர்களின் கவனயீனம் காரணமாக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், குழந்தையை இழந்துள்ள சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் அம்பாந்தோட்டை காவல்துறை மற்றும் மருத்துவமனையின் பணிப்பாளரிமும் முறைப்பாடு செய்துள்ளனர்.மேலும் படிக்க...
பகிடிவதையில் ஈடுபட்டால் உடல் பாகங்கள் துண்டிக்கப்படும்
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டால் ஈவு இரக்கம் இன்றி உடல் பாகங்கள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவா குழுவினால் உரிமை கோரப்பட்டே இவ்வெச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அத்துண்டுப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள்மேலும் படிக்க...
தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் நாகரீகமற்ற செயற்பாடு
யாழ்ப்பாணம் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாகரீகமற்ற செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டித்துள்ளது. இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்மேலும் படிக்க...
கொழும்பு முதல் வவுனியா வரை கடுகதி புகையிர சேவை
கொழும்பு முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பிலிருந்து பிற்பகல் 3.55 இற்குமேலும் படிக்க...
இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், 2019-20 கல்வியாண்டுக்கு புலமைப் பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி துறைகளில் பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு மற்றும் கலாநிதி கற்கை நெறிகளுக்கு இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்மேலும் படிக்க...
நாடு திரும்ப உள்ள இலங்கை மீனவர்கள்
மாலைதீவு அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள 21 இலங்கை மீனவர்கள் இன்றிரவு நாடு திரும்ப உள்ளனர்.இலங்கை மீனவர்கள் 21 பேரும் மாலைதீவுகள் கடல் எல்லைக்குள் உட்பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், அவர்களை விடுவிக்கும்மேலும் படிக்க...
20ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை
தேர்தல் தொடர்பில் ஜனநாயக தேசிய முன்னணியின் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் மீண்டும் இடம்பெறவுள்ளது.இந்த நிலையில், தொழிலாளர் தினத்தன்று தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படக்கூடும் என்று அதன் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோமேலும் படிக்க...
புதிய கூட்டணி நம்பிக்கையில்லை – ஜீ.எல். பீரிஸ்
2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பங்கேற்காமையானது நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டணி அமைப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கிக்கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டது
தமிழர்களை கைது செய்யும்போது தவறாக தெரியாத பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது, நாட்டின் ஏனைய தரப்பினரை கைது செய்யும்போது மாத்திரம் தவறாக தெரிவதாக கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரைமேலும் படிக்க...
வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல்
மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள அடுத்தடுத்து இரண்டு வீடுகள் மற்றும் மானிப்பாய்மேலும் படிக்க...
இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழப்பு
இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த 21 வயதான சந்திரசேகரன் விஸ்ணுதாஸ் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழமை போல் வேலை முடிந்து வீடு திரும்பியமேலும் படிக்க...
சித்திரவதைக்கான உத்தரவுகள் அனைத்தும், கோத்தாபயவால் வழங்கப்பட்டது
சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் லண்டனில் நடைபெற்ற கோத்தாபயவுக்கு எதிராக வழக்கு செய்தமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
கடற்படைக்காக மண்டைதீவில் காணி சுவீகரிக்க தீவிர முயற்சி
யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலர் பிரிவில் கடற்படை முகாம் அமைப்பதற்கு 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் அளவுடைய காணி கையகப்படுத்தப்படவுள்ளது. அந்தக் காணி நாளை அளவீடு செய்யப்படவுள்ளது. இது தொடர்பான அறிவித்தலும் வழங்கப்பட்டுள்ளது.இந்தக் காணிகள் 11 பேருக்குச் சொந்தமானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- மேலும் படிக்க