Main Menu

நாடு திரும்ப உள்ள இலங்கை மீனவர்கள்

மாலைதீவு அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள 21 இலங்கை மீனவர்கள் இன்றிரவு நாடு திரும்ப உள்ளனர்.
இலங்கை மீனவர்கள் 21 பேரும் மாலைதீவுகள் கடல் எல்லைக்குள் உட்பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்களை விடுவிக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கும் மாலைத்தீவு அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.
குறித்த பேச்சுவார்ததைகளின் பிரதிபலனாக இலங்கை மீனவர்களை விடுவிக்க மாலைதீவு அரசாங்கம் இணங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது

பகிரவும்...